எண்ணெய் குளியலும் அதன் பயன்களும்


    
எண்ணெய் குளியல் என்பது தலை முதல் கால் வரை எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பர். வாரம் ஒருமுறை குறிப்பிட்ட நாளில் இதனை பின்பற்றினால் நன்மைகள் பல.

தேய்க்க  பயன்படும் பொருட்கள்:

    நெய், எண்ணெய் ( நல்லெண்ணெய் , தேங்காய் எண்ணெய்) , மருத்துவ தைலங்கள்.

முறை:

    எண்ணெய்யை  தலை முதல் கால் வரை சூடெழும்பாமல் தேய்க்க வேண்டும். பிறகு சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்கக்கூடாது.காலையில் மட்டுமே எண்ணெய் குளியல் எடுத்துக்கொள்ள வேண்டும்.  

செய்யவேண்டிய நாட்கள்: 

ஆண்கள்: புதன்கிழமை & சனிக்கிழமை 

பெண்கள்: வெள்ளிக்கிழமை

குளிக்க பயன்படுத்த வேண்டிய பொருட்கள்:

தலைக்கு  சிகைக்காய் அல்லது அரைப்பு வகைகள் பயன்படுத்தி குளிக்க வேண்டும்.

  *நெய் தேய்த்தால் பச்சை பயறு மாவு பயன்படுத்தி குளிக்க வேண்டும்.

    *எண்ணெய் / தைலம் சிகைக்காய்  பயன்படுத்தி குளிக்க வேண்டும்

    *தோல் நோய்கள் இருப்பின் உசிலந்தூள் பயன்படுத்தலாம்.

    *புண்கள்/காயங்கள் இருப்பின் இலுப்பை பிண்ணாக்கு பயன்படுத்தலாம்.

சோப்பு பயன்படுத்துவதற்கு பதிலாக நலுங்குமா பயன்படுத்தி குளிக்கலாம்

பயன்கள்:

    *உடலில் இரத்த ஓட்டம்  அதிகரிக்கிறது. அதனால் உடல் உறுப்புகள் பலம் பெறுகிறது.

    *தோல் வறட்சி நீங்கும்.

    *தலைவலி நீங்கும்.

    *சோம்பல் நீங்கும். 

    *பல்வேறு நோய்கள் வராமல் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்

குறிப்புகள்:

    *முடியை சிறிதும் ஈரமில்லாமல் உலர்த்த வேண்டும். அவ்வாறு சரியாக உலர்த்தாவிட்டால் தலைபாரம் , தலைவலி, சுரம் முதலியவை உண்டாகும்.

    * முடிந்தால் சாம்பிராணி கொண்டு தூபம் போடலாம்.

    *பகலில் உறங்கக்கூடாது.

    *அதிக வெயிலில் செல்லக்கூடாது. 

    *உடலுறவு கொள்ளக்கூடாது.

    *எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழைப்பூவின் மகத்துவம்

தாம்பூலம் தரித்தல்